ரம்ஜான் கொண்டாட பெண்களுக்கு தடை: தலிபான்கள் உத்தரவு

காபூல்: ஆப்கானிஸ்தானில் 2 மாகாணங்களில் பெண்கள் ரம்ஜான் கொண்டாட்டங்களில் பங்கேற்க தலிபான்கள் தடை விதித்தனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பெண்களின் கல்வி பறிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, உலகம் முழுவதும் நேற்று ரம்ஜான் கொண்டாடப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் ரம்ஜான் கொண்டாட தலிபான்கள் தடை விதித்துள்ளனர். தக்ஹர் மற்றும் பஹ்லன் மாகாணங்களில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரம்ஜான் தினத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே குழுவாக செல்லக்கூடாது என்றும் தடை விதித்துள்ளனர். இதற்கு முன், தலிபான் ஆட்சியின் போதும் இதே போன்ற தடைகள் விதிக்கப்பட்டது.

The post ரம்ஜான் கொண்டாட பெண்களுக்கு தடை: தலிபான்கள் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: