மண் கடத்திய லாரி பறிமுதல்

ஊத்தங்கரை, ஏப்.21: மத்தூர் போலீஸ் எஸ்ஐ சரவணன் தலைமையிலான போலீசார், திருவண்ணாமலை-கிருஷ்ணகிரி மெயின்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக லாரியில் வந்த 2 பேர், போலீசார் சோதனையில் ஈடுபடுவதை பார்த்ததும் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பினர். பின்னர் அந்த லாரியில் போலீசார் சோதனை செய்த போது, அதில் மண் கடத்தி வந்தது தெரிந்தது.

இதையடுத்து 2 யூனிட் மணலுடன், லாரியை பறிமுதல் செய்தனர். தப்பியோடியவர்கள் அத்திப்பள்ளத்தை சேர்ந்த விக்னேஷ், அஜித்குமார் என்பது தெரிந்தது. தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

The post மண் கடத்திய லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: