தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

மதுராந்தகம்: கிருஷ்ணகிரி மாவட்டம் சின்ன பெல்லாளம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன். இவர், சிஆர்பிஎப் பிரிவில் எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் வசந்த் (23), மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே பள்ளியகரம் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில், நண்பர்கள் 3 பேருடன் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். கடந்த தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நண்பர்கள் 3 பேரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். வசந்த் மட்டும் செல்லாமல் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், விடுமுறை முடிந்து 3 பேரும் வேலைக்கு திரும்பினர். வீட்டின் கதவு பூட்டியிருந்தது. வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால், உடனே படாளம் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

மின் விசிறியில் வசந்த் தூக்கில் பிணமாக கிடந்துள்ளார். உடலை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரியில் உள்ள அவரது தந்தைக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் பதறியடித்து கொண்டு விரைந்தார். பின்னர், அவர் படாளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். காதல் பிரச்சனையா, கடன் தொல்லையா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என பல்வேறு கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: