காரில் கஞ்சா கடத்திய மாகே, கேரளா வாலிபர்கள் 4 பேர் கைது

புதுச்சேரி, ஏப். 18: புதுச்சேரி மாநிலத்துக்குட்பட்ட மாகே பிராந்தியதுக்கு கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சீனியர் எஸ்பி நாரா சைதன்யா உத்தரவின் பேரில் எஸ்பி ராஜசேகர வல்லட் மேற்பார்வையில் பல்லூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சேகர், சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் பந்தக்கால்-பல்லூர் மெயின் ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது 550 கிராம் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து காரில் வந்த நான்கு பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மாகே பகுதியை சேர்ந்த முகமது சையது (24), முகமது பைஸ் (23), கேரளாவை சேர்ந்த அலோக் (23), ஷாரோன் (24) என தெரியவந்தது. மேலும், அவர்கள் வடமாநிலங்களுக்கு சென்று போதை பொருட்களை வாங்கி அங்கிருந்து விற்பனைக்காக மாகே கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்து கார், செல்போன், ரூ.30 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் நான்கு பேரையும் கைது செய்து சிறையைில் அடைத்தனர்.

The post காரில் கஞ்சா கடத்திய மாகே, கேரளா வாலிபர்கள் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: