வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் அமைக்க உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

துபாய்: அமீரக திமுகவின் ஆலோசகர் ராஜா துரைராஜ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: வெளிநாடு வாழ் தமிழர்கள், பல்லாண்டு காலமாக வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். வாரியம் அமைப்பதன் மூலம் வெளிநாட்டில் பணியாற்றும் லட்சக்கணக்கான தமிழக தொழிலாளர்களின் நலன் காக்கப்படும். அவர்கள் சொந்த நாடு திரும்பினால் கடனுதவி, மருத்துவ காப்பீட்டு திட்டம், சலுகை விலையில் விமான டிக்கெட் போன்றவற்றை நிறைவேற்ற ஏதுவாக இருக்கும். அதோடு நலவாரியம் ஒரு இணைப்பு பாலமாக திகழும் என்பதால் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். குழந்தையின் தேவையை தாய் அறிந்து நிறைவேற்றுவதுபோல் அவரவர் குடும்பத்தில் ஒருவராக தன்னையும் நினைத்து உடனடியாக வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்கான புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்க உத்தரவிட்ட வெளிநாடு வாழ் தமிழர்களின் பாதுகாவலராக திகழும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்….

The post வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் அமைக்க உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி appeared first on Dinakaran.

Related Stories: