திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

சேந்தமங்கலம், ஏப். 7: கொல்லிமலையில், திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. கொல்லிமலை ஒன்றிய திமுக சார்பில் செம்மேடு பஸ் நிலையம் அருகே, புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் செந்தில் முருகன் தலைமை வகித்து, புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து கட்சி நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினார். அப்போது கொல்லிமலை ஒன்றியம் முழுவதும் உள்ள 14 ஊராட்சிகளில் 10 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் செல்வம், துணை செயலாளர் சீரங்கன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஈஸ்வரன், செயற்குழு உறுப்பினர்கள் சின்ன வெள்ளையன், ஜெயபால், முன்னாள் மாவட்ட பிரதிநிதி பாலசுப்ரமணி, இளைஞர் அணி அமைப்பாளர் கனகராஜ், மாணவர் அணி அமைப்பாளர் நேரு, நிர்வாகிகள் ராஜேந்திரன், பழனிசாமி, வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: