×

விலங்குகளுக்காக தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம் கோடை காலத்தில் வனங்களில்

ஒடுகத்தூர், மார்ச் 24: ஒடுகத்தூர் வனப்பகுதிகளில் கோடை காலத்தில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி நேற்று தொடங்கியது. தற்போது கோடை காலம் தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் காட்டு பகுதிகளில் வனவிலங்குகளின் தாக்கத்தை தீர்க்கும் வகையில் அங்குள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகள் தொடங்கி உள்ளது.

அதன்படி, ஒடுகத்தூர் வனச்சகத்திற்கு உட்பட்ட பின்னத்துரை, கொம்மன்கொட்டாய், ஊனைமோட்டூர் உள்ளிட்ட காட்டுப்பகுதிகளில் வனச்சரக அலுவலர் இந்து உத்தரவின் பேரில் நேற்று தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கப்பட்டது. அதேபோல், இன்னும் காட்டு பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதற்கான ஏற்பாடுகள் மற்றும் தேவையான இடங்களில் இன்னும் புதிய தொட்டிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags :
× RELATED கிராமத்திற்குள் நுழைந்த 6 காட்டு...