கடை, வீடுகளில் கொள்ளை முயற்சி

இளம்பிள்ளை, : காகாபாளையம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள், தற்போது காவல் நிலையம் அருகில் உள்ள வீடு, கடைகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு உள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காகாபாளையம் பகுதியில், மகுடஞ்சாவடி காவல் நிலையம் அமைந்துள்ளன. இப்பகுதியில் கடந்த சில தினங்களில் அரிசி கடை, டீக்கடை, பேக்கரி, வீடு, துணிக்கடை, மளிகை கடை, உடற்பயிற்சி மையம், பேன்சி ஸ்டோர்களில் மர்ம நபர்கள் நள்ளிரவு ஷட்டரை உடைத்து பணம், பொருட்களை அள்ளிச்சென்றனர். அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடைபெறும் பகுதி, கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்டு இருப்பதால், சாலையில் மறுபக்கம் உள்ள மகுடஞ்சாவடி போலீசார் மெத்தமான இருந்து வருகின்றனர். சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு தேடிய போதிலும், குற்றவாளி பிடிபட வில்லை. இந்த கொள்ளை சம்பவ வீடியோ இணைய தளங்களில் வெளியாக வைரலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தற்போது மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள வீடு, கடைகளில் நள்ளிரவு கொள்ளை முயற்சி நடந்தது. அவர்கள் இரவு நேரத்தில் கத்தியுடன் வலம் வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Related Stories: