×

எலி மருந்து தின்று வாலிபர் தற்கொலை

ஈரோடு, மார்ச் 19: சென்னிமலை அருகே கே.ஜி.வலசு பகுதியை சேர்ந்தவர் சிவராம் (27). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். திருமணம் ஆகவில்லை. சிவராமின் தாயார் லதா கடந்த 3ம் தேதி திருப்பூர் அருகே தனது மகள் அஸ்வதி வீட்டுக்கு சென்றிருந்தார். அவரை கே.ஜி.வலசில் உள்ள தனது வீட்டுக்கு சிவராம் அழைத்த போது உடல்நிலை சரியான பிறகு அனுப்பி வைப்பதாக சிவராமின் சகோதரி அஸ்வதி தெரிவித்துள்ளார்.

இதனால் மனம் உடைந்த சிவராம் கடந்த 12ம் தேதி தேதி எலி மருந்தை தின்றுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் சிவராமை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் சிவராம் இறந்தார். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு