×

வீரராக்கியத்தில் பராமரிப்பு பணி கரூர் வரை மட்டுமே பாலக்காடு பயணிகள் ரயில் இயக்கம்

ஈரோடு, மார்ச் 18:  வீரராக்கியம் ஊரில் பராமரிப்பு பணி  நடைபெறுவதால் திருச்சி  பாலக்காடு பயணிகள் ரயில் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து தமிழ் நாட்டின் திருச்சி வரை ரயில் எண் : 16843 பாலக்காடு- திருச்சி பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கரூர் ரயில்வே  நிலையம் அருகில் உள்ள வீரராக்கியம் எனும் ஊரில் ரயில்வே பொறியியல் துறை மூலமாக மார்ச் 19ம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக மார்ச் 19ம் தேதி பாலக்காடு பயணிகள் ரயில் மதியம் 1 மணிக்கு திருச்சியில் இருந்து இயக்கப்படுவதற்கு பதிலாக கரூரில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படும். திருச்சி - கரூர் இடையிலான ரயில் இயக்கம் அன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags : warerakkyam ,
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு