சேலம், செப்.30:திருமலையில் வாரி பிரமோற்சவத்திற்காக சேலத்தில் இருந்து 5டன் பூக்கள் மாலை தொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.திருப்பதி திருமலையில் வாரி பிரமோற்சவம் விழா அக்.5ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் பக்திசாரர் பக்த சபா சார்பில் 5 டன் மஞ்சள் சாமந்தி, ஆரஞ்சு சாமந்தி பூக்கள் மாலையாக தொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பெருமாள், தாயாருக்கு சிறப்பு பூஜை நடந்தது.