கறம்பக்குடியில் 42 மையங்களில்1800 பேருக்கு கொரோனா தடுப்பூசி

கறம்பக்குடி, செப்.20: கறம்பக்குடி பகுதியில் நடந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 1800 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டார மருத்துவ அளவிலான சுகாதார மையங்களில் அரசு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதன்படி கறம்பக்குடி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மழையூர் வானக்கன்காடு கோட்டை காடு, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், குழந்திரான்பட்டு மற்றும் துணை சுகாதார மையங்கள் உள்ளிட்ட 42 மையங்களில் நடந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் 1800 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் அரசு அறிவிப்பின்படி கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தி தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என மருத்துவ குழுவினர் வலியுறுத்தினர்.

Related Stories: