நாகப்பட்டினம், ஆக.12: நாகப்பட்டினம், நாகூர் பகுதியில் புதை வட மூலம் மின் பாதை அமைக்கும் பணி விரிவுபடுத்தப்படும் என்று சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா கூறினார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் நேற்று ஆய்வு நடத்தினர். இதன் பின்னர் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தின் முடிவில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா கூறியதாவது: கடலோர பேரிடர் அபாயக் குறைப்புத் தொகுப்பு திட்டத்தி கீழ் உலக வங்கி நிதியுதவியுடன் சூறாவளி, புயல், வெள்ளம், சுனாமி, மற்றும் பல இயற்கைப் பேரிடர் காலங்களில் இயற்கை ஆபத்துகள் மூலம் ஏற்படும் பேரிடரைக் குறைக்கும் நோக்கத்துடன் வேளாங்கண்ணி பகுதிக்கு உயர் மற்றும் தாழ் அழுத்த மேல்நிலை மின் விநியோகத்தை புதை வட மூலம் மின் பாதை அமைக்கும் பணி அனைத்துறை ஒத்துழைப்புடன் நிறைவு பெற்றுள்ளது.