தேவகோட்டை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் காயம்

தேவகோட்டை, ஆக.8:  தேவகோட்டை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 3 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி   தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சுற்றுலா வேன்  சென்று கொண்டிருந்தது. வேனை டிரைவர்  ராஜ்(55) ஓட்டி வந்தார். டிரைவர் உள்பட 5 ஆண்கள், 5 பெண்கள் என 10 பேர் பயணம் செய்தனர். தேவகோட்டை அருகே புளியால் கிளியூர் சந்திப்பில் சென்ற வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்தது. வேனில் செய்தவர்களில் மூன்று பேர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். சம்பவம்  குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து  விசாரிக்கின்றனர்.  

Related Stories: