மஸ்கட்டில் சிக்கித் தவிக்கும் 8 மீனவர்களை மீட்க வேண்டும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட்டில் சிக்கித் தவிக்கும் 8 மீனவர்களை மீட்க தூதரக அளவிலான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 8 மீனவர்களின் விசா காலாவதியானதாலும், ஓமன் நாட்டவரால் அவர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படாததாலும் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் மீனவர்களின் அவலநிலையைக் குறிப்பிட்டு, அவர்களை மஸ்கட்டிலிருந்து திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்தி, தூதரக அளவில் தேவையான அனைத்து உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: