குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

பொன்னமராவதி, ஜூன் 11: பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஒன்றிய ஆணையர் தங்கராஜூ தலைமையில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சதாசிவம் முன்னிலையில் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்று கொள்ளப்பட்டது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், சமூக நல விரிவாக்க அலுவலர் முத்துலெட்சுமி, ஊர்நல அலுவலர்கள் தமிழ்செல்வி, கல்யாணி, அலுவலக பிரிவு எழுத்தர்கள் வனிதா, அம்பிகா, சாத்தையா, சண்முகசுந்தரம், கணினி உதவியாளர் நித்யா உட்பட பலர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Related Stories: