வேளச்சேரி, மே 21: வேளச்சேரி தண்டீஸ்வரம் நகரை சேர்ந்தவர் காந்த் மூர்த்தி (60). கடந்த சில வாரங்களுக்கு முன் இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு, அவரது நண்பரின் எண்ணில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், மருத்துவ செலவிற்காக அவசரமாக பணம் தேவைப்படுகிறது. எனவே, உடனடியாக இதில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்கில் ரூ1.30 லட்சம் செலுத்த வேண்டும். சில நாட்களில் திருப்பி கொடுத்து விடுகிறேன்,’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்த அவர், உடனே தனது நண்பருக்கு ஏதோ ஆபத்து என நினைத்து, அந்த வங்கி கணக்கில் ரூ1.30 லட்சம் செலுத்தி உள்ளார்.