கடையநல்லூர், ஏப்.2: தென்காசி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட வீரசிகாமணி, வேலாயுதபுரம், இடைகால் உள்ளிட்ட பள்ளி சத்துணவு மையங்களில் சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் வீரசிகாமணியில் அமைச்சருக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமையில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் சேக்தாவூது, தென்காசி ஒன்றிய செயலாளர்கள் ராமையா, லாலா சங்கரபாண்டியன், பொன் முத்தையாபாண்டியன், வெள்ளத்துரை, பூசைத்துரை, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், தென்காசி யூனியன் சேர்மன் வல்லம் ஷேக்அப்துல்லா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இலத்தூர் ஆறுமுகச்சாமி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை வல்லம் திவான்ஒலி, கொட்டாகுளம் கோமதிநாயகம், செங்கோட்டை நகர செயலாளர் ரஹீம், பேரூராட்சி தலைவர்கள் ஆய்க்குடி சுந்தரராஜ், சாம்பவர்வடகரை சீதாலட்சுமி முத்து, பேரூர் செயலாளர் செல்லக்கனி என்ற முத்து, மாவட்ட கவுன்சிலர் மதி மாரிமுத்து, யூனியன் துணைத்தலைவர்கள் கடையநல்லூர் ஐவேந்திரன் தினேஷ், தென்காசி கனகராஜ் முத்துப்பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் சிங்கிலிபட்டி மணிகண்டன், கலாநிதி, வினோதினி, பகவதியப்பன், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் தமிழ்ச்செல்வி முருகன், மாவட்ட நெசவாளரணி மூவண்ண மசூது, கவுன்சிலர்கள் முருகன், திவான்மைதீன், அரபாவஹாப், மணிகண்டன் பங்கேற்றனர்.