பூதலூர் பகுதியில் மணல் கடத்த பயன்படுத்திய வேன் பறிமுதல்

வல்லம், ஏப்.2: தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்த லோடு வேனை போலீசாரை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே இந்தலூர் பகுதியில் பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த லோடு வேனை மறித்தனர். அதில் சோதனை மேற்கொண்ட போது அதில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த லோடு வேனை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து பூதலூர் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்த திருத்துறைப்பூண்டி, அண்ணா சத்திரம் பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அருள் பிரிட்டோ ராஜ் (30) என்பவரை கைது செய்தனர்.

Related Stories: