கூடுவாஞ்சேரி: வண்டலூர் அருகே கொளப்பாக்கத்தில் சட்ட விதிமுறைகளை பின்பற்றாததால் பெட்ரோல் பங்கிற்கு தாசில்தார் சீல் வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் கொளப்பாக்கம் கிராமத்தின் சாலையோரத்தில் பாரத் பெட்ரோல் பங்க் பல ஆண்டுகளாக இயங்குகிறது. கடந்த 17.10.2020 அன்று, இந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும்போது தீ விபத்து ஏற்பட்டதாக நாக்பூரில் உள்ள வெடிமருந்து தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. இதுதொடர்பான இறுதி விசாரணை முடிந்தது. இதற்கான, மறு உத்தரவு வரும் வரை அந்த பெட்ரோல் பங்கிற்கு சீல் வைக்கும்படி நாக்பூரில் உள்ள தலைமை கட்டுப்பாட்டாளர் செங்கல்பட்டு கலெக்டருக்கு கடிதம் அனுப்பினார்.