மேலூர், மார்ச் 26: மேலூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 10 பேர் காயமடைந்தனர். மேலூர் கொட்டாம்பட்டி அருகே வி.புதூரில் உள்ள முத்துபிடாரி அம்மன், முடிமலையாண்டி, வேப்பிலைக்காரி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.