தொண்டி, மார்ச் 4: தொண்டி புது பஸ் ஸ்டாண்டில் போதிய விளக்குகள் இல்லாததால், இருள் சூழ்ந்து காணப்படுவதால் ஹைமாஸ் விளக்கு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் நகராகும். இங்கிருந்து மதுரை சென்னை, திருச்சி ,கோவை என அனைத்து பகுதிக்கும் போக்குவரத்து உள்ளது. இங்குள்ள புது பஸ் ஸ்டாண்டில் போதிய விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டதும் இருளை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் நடக்கிறது. இரவு நேரத்தில் பயணிகள் ஒரு வித அச்சத்துடன் நிற்கின்றனர்.