சென்னை: மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரூ.8 கோடி மதிப்பிலான 1 கிரவுண்ட் சொத்துகளை மீட்டு அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாதவ பெருமாள் கோயிலுக்கு சொந்தமாக மயிலாப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. இதில், மயிலாப்பூர் கச்சேரி சாலையில் 1 கிரவுண்ட் (2,400 சதுர அடி) பரப்பு கொண்ட தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய கட்டிடம் ஒன்றும் உள்ளது. இந்த கட்டிடத்தை ஸ்ரீராமுலு செட்டியார் அறக்கட்டளை சார்பில், மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயிலுக்கு தானமாக ஒப்படைக்கப்பட்டன. கட்டிடத்தில் ஏற்கனவே வாடகையில் இருந்தோர், கோயில் நிர்வாகத்துக்கு வாடகை பாக்கி செலுத்த முன்வரவில்லை. இது தொடர்பாக, கோயில் நிர்வாகம் சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.