திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்களில் எண்ணற்ற சாதனை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பெருமிதம்

சிவகங்கை, பிப். 15: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதத்தில் எண்ணற்ற சாதனைகள் செய்யப்பட்டுள்ளன என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசினார். சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. திமுக நகர் செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். இதில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதத்தில் எண்ணற்ற சாதனைகள் செய்யப்பட்டுள்ளன.இவற்றிற்கு மக்கள் தரும் அங்கீகாரமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றி இருக்கும். திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான திட்டங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அந்த இலக்கையும் தாண்டி கூடுதலாக கடன் வழங்கப்பட்டு, நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்பி, முன்னாள் அமைச்சர் தென்னவன், காங்கிரஸ் மாவட்டத்தலைவர் சத்தியமூர்த்தி, திமுக மாவட்ட துணைச் செயலாளர் மணிமுத்து, ஒன்றிய செயலாளர்கள் கென்னடி, ஆரோக்கியசாமி, கிருஷ்ணகுமார், காங்கிரஸ் வட்டாரத்தலைவர் மதியழகன், முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகானந்தம், நிர்வாகிகள் கணேசன், சின்னராதா, முத்தூர் கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: