சிவகங்கை, பிப். 15: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதத்தில் எண்ணற்ற சாதனைகள் செய்யப்பட்டுள்ளன என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசினார். சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. திமுக நகர் செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். இதில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதத்தில் எண்ணற்ற சாதனைகள் செய்யப்பட்டுள்ளன.இவற்றிற்கு மக்கள் தரும் அங்கீகாரமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றி இருக்கும். திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.