குறிஞ்சிப்பாடி பகுதியில் 9 மோட்டார் சைக்கிள் திருடிய 2 கல்லூரி மாணவர்கள் கைது

குறிஞ்சிப்பாடி, பிப். 12: திருட்டில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 9 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி பகுதிகளில் பைக் திருட்டுகள் அதிகரித்து வந்த   புகார்கள் மீது டெல்டா டீம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.குறிஞ்சிப்பாடி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாக பேசிய வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில், புவனகிரி அடுத்த பெருமாத்தூரை சேர்ந்த ஜனார்த்தனன் மகன் தமிழ்மணி(20), பி முட்லூர் கல்லூரியில் பி காம்., இரண்டாம் ஆண்டு மாணவர் என்பதும், இவரது நண்பர் ரங்கநாதன் மகன் ராஜேஷ்குமார் (18), கோயம்புத்தூர் தனியார் கல்லூரியில் பிடெக்., முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் 9 பைக்  திருடியதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த டெல்டா போலீசார், குறிஞ்சிப்பாடி போலீசில் ஒப்படைத்தனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, 9 பைக்குகளை பறிமுதல் செய்து, குறிஞ்சிப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: