ஆலந்தூர்: ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளர் என்.சந்திரன் ஆலந்தூர் 166வது வார்டு திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் நேற்று தனது வார்டுக்கு உட்பட்ட பழவந்தாங்கல் டீச்சர்ஸ் காலனி, ரகுபதி நகர், பர்மா காலனி போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர், `மழை வெள்ளம், கொரோனா காலங்களில் கட்சி நிர்வாகிகளுடன் ஒடோடி வந்து உதவி செய்துள்ளேன். என்ன வெற்றிபெற செய்தால் அரசின் திட்டங்கள் அனைத்தையும் நமது பகுதிக்கு கொண்டு வருவேன். பழவந்தாங்கல் பர்மா காலனியில் சமுதாய கூடம், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு புதிய கட்டிடம் போன்றவை கட்டித்தர நடவடிக்கை எடுப்பேன்’ என்றார்.