திருப்பூர், பிப். 10: திருப்பூர், மங்கலம் போலீசார் பல்லடம்-மங்கலம் சாலையில் நேற்று வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் சந்தேகத்திற்கிடமாக வந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் முண்ணுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். பின்னர் போலீசார் அந்த 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகாவை சேர்ந்த முனியாண்டி (19), மதுரை மாவட்ட திருப்பரங்குன்றம் தாலுகாவை சேர்ந்த பிரவீன் குமார் (எ) சியான் (22), கோவை மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.