ஒரத்தநாடு அருகே இளம் பெண் திடீர் மாயம் போலீசில் கணவர் புகார்

ஒரத்தநாடு,செப்.26: ஒரத்தநாடு அருகே உள்ள வாட்டாத்தி கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. அவரது மனைவி ரூபா (24). கிருஷ்ணமூர்த்தி விவசாய கூலி தொழிலாளி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வீட்டுக்கு வந்தபோது மனைவி ரூபா காணவில்லை. இதில் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து வாட்டாத்தி கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: