தாம்பரம்: தாம்பரம் சானடோரியம் தேசிய சித்த மருத்துவமனையில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வினாடி வினா, பாரம்பரிய உடை அணிவகுப்பு, பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் பற்றி கவிதை போட்டிகள், பெண் குழந்தைகள் பராமரிப்பில் சித்த மருத்துவத்தின் பங்கு என்ற தலைப்பில் பேச்சு போட்டிகள் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு, தேசிய சித்த மருத்துவமனையின் இயக்குநர் மீனாகுமாரி பரிசு வழங்கி, பேசியதாவது: பெண் குழந்தைகள் மஞ்சள் நீரில் குளித்தல், சரும பராமரிப்பிற்காக நலங்கு மாவு பயன்படுத்துதல், உடல் சூட்டை குறைத்து நன்னிலையில் இருக்க பஞ்சகற்ப குளியல், தளர்வான பருத்தி ஆடை அணிதல், யோகா முறையில் உடலை வலுப்படுத்த 8 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் யோகா மற்றும் ஆசனங்களை கற்றுக்கொண்டு தினமும் காலையில் செய்ய வேண்டும்.