சென்னை: ஒப்பந்த பணத்திற்கான பில்லை முடித்துதர ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் டான்ஜெட்கோ பொறியாளர் இருவரையும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. சோழிங்கநல்லூரில் கடந்த 2007ல் துணை மின் நிலையம் அமைப்பதற்காக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (டான்ஜெட்கோ) முனியசாமி என்பவர் ரூ.69 லடசத்து 60 ஆயிரத்திற்கு ஒப்பந்தம் எடுத்தார். ஒப்பந்த பணிகளை முடிப்பதற்காக தன்னிடம் ஜவஹர், காசி விஸ்வநாதன் என்ற 2 பொறியாளர்கள் தலா ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக ஒப்பந்ததாரர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்தார். இதையடுத்து, அடையாறில் உள்ள ஒரு ஓட்டலில் முனியசாமியிடம் 2 பொறியாளர்கள் பணத்தை வாங்கும்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.