சாத்தூர்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்திய முன்கள பணியாளர்கள், முதியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஜன.10 முதல் செலுத்தப்படும் என சுகாதார துறை அறிவித்திருந்தது. அதன்படி நேற்று இவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி மாநிலம் முழுவதும் துவங்கியது. சாத்தூர் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமையில் நடந்தது.