உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு திமுகவினரிடம் நேர்காணல்

திருவொற்றியூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாதவரம் தொகுதி மற்றும் திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட மாவட்ட திமுகவிடம் ஏராளமானோர் மனு செய்திருந்தனர். மனு செய்தவர்களுக்கு நேர்காணல் நிகழ்ச்சி நேற்று மாதவரம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில், கலாநிதி வீராசாமி எம்பி, கே.பி.சங்கர் எம்எல்ஏ, பகுதி செயலாளர்கள் துக்காராம், தி.மு.தனியரசு ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

Related Stories: