மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்திலிருந்து சார்ஜா செல்லும் ஏர் அரேபியா பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளின் பாஸ்போர்ட், ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சேலத்தை சேர்ந்த சதீஷ்குமார் (34), விமானத்தில் சார்ஜா செல்ல வந்திருந்தார். அவருடைய பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டர் மூலம் பரிசோதித்தனர். அப்போது பயணி சதீஷ்குமார் மீது சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசிலும், சேலம் மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவாகி இருப்பதும், தலைமறைவு குற்றவாளி என்பதும் தெரியவந்தது.