திருவாரூர், ஜன. 9: திருவாரூரில் ரூ 1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நெல் சேமிப்பு கிடங்கினை நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் திருவாரூரில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 500 மெ.டன் கொள்ளளவு கொண்ட புதிய சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டுள்ள நிலையில் இதனை முதல்வர் மு. க ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனையடுத்து இந்த நெல் சேமிப்பு கிடங்கில் நாகை எம்பி செல்வராஜ், டிஆர்ஓ சிதம்பரம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். பின்னர் டிஆர்ஓ சிதம்பரம் கூறியதாவது, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் ரூ.24 கோடியே 30லட்சம் மதிப்பீட்டளவில் 16 ஆயிரம் மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் கட்டுவதற்கு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.