திருமங்கலம், ஜன. 8: உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்தவர் வெள்ளையன். இவரது மகள் பாலஜோதிகா (21). பிஎஸ்சி பட்டதாரி. இவருக்கும், திருமங்கலம் கட்ராம்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (27) என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கண்ணன் கேரளாவில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். கணவருடன் தனிக்குடித்தனம் நடத்திய பாலஜோதிகா, கொரோனா காலத்தில் பெற்றோர் வீட்டிற்கு வந்தார். இங்கிருந்து முதுகலைப் பட்டத்திற்கு படிக்கத் தொடங்கினார். இந்நிலையில், மனைவியுடன் வாழ விருப்பமில்லை என விவாகரத்து கேட்டு, கண்ணன் நீதிமன்றத்தை நாடினார். திருமணத்தின்போது பெற்றோர் சீதனமாக வழங்கிய 13 பவுன் நகை, பண்ட பாத்திரங்களை திருப்பிக் கொடுத்தால், விவாகரத்துக்கு சம்மதிப்பதாக பாலஜோதிகாவும் தெரிவித்துள்ளார்.