புதுக்கோட்டை, ஜன.8: மின் வாரிய அலுவலகத்தில் வருவாய் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தவர், திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை-அரிமளம் சாலையில் வசித்து வந்தவர் சபரிராஜ் (47). இவர் புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் வருவாய் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று பகலில் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்த சபரிராஜ் திடீரென அவரது அறைக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.