கறம்பக்குடி அருகே ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர், உறவினர் விவரம் தெரிந்தால் 21 நாட்களுக்குள் தகவல் தரலாம்

புதுக்கோட்டை, டிச. 24: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, பிலாவிடுதி பேருந்து நிறுத்தத்தில் பிறந்து சில மணிநேரங்களே ஆன நிலையில் பெண் குழந்தை 23.7.2021 அன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த பெண் குழந்தைக்கு யாழினி என்று பெயரிடப்பட்டு, புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் மூலம் மதுரை மாவட்டம், அழகு சிறையில் உள்ள கிளாரிசன் கருணை இல்லம் என்ற சிறப்பு தத்து நிறுவனத்தில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றது. மேலும் குழந்தை யாழினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால் 21 நாட்களுக்குள் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும் அவ்வாறு தகவல் தெரிவிக்காவிடில் குழந்தையை சட்டப்படியாக தத்து கொடுப்பதற்கு குழந்தைகள் நலக் குழுவின் தடையில்லா சான்று வழங்கப்படும். இக்குழந்தை பற்றி தகவல் தெரிந்தால் பொதுமக்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, முன்னாள் படை வீரர்கள் மைய வாளகம், கல்யாணராமபுரம் 1ம் வீதி, புதுக்கோட்டை 2 என்ற முகவரிக்கும், 04322-221266 என்ற தொலைபேசி, 8056431053 என்ற செல்போன் எண்களுக்கும் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Related Stories: