சிவகங்கை, டிச.18: சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மானாமதுரை நகராட்சியின் 27 வார்டுகளுக்கான வரைவு வார்டு மறுவரையறை கருத்துருக்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பார்வைக்கு இன்று வெளியிடப்படுகிறது. மேற்குறிப்பிட்ட வரைவு வார்டு மறுவரையறை கருத்துருக்களின் மீது ஆட்சேபனைகள் மற்றும் கருத்துருக்கள் ஏதும் இருப்பின் இன்று முதல் டிச.24க்குள் மானாமதுரை நகராட்சி வார்டுகளின் மறுவரையறை அதிகாரி, நகராட்சி ஆணையரிடம் மனுக்கள் சமர்ப்பிக்கலாம்.