கும்பகோணம்,டிச.17: கும்பகோணத்தில் முச்சந்தி சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்ந்து 100 நாட்களையும் கடந்துள்ளது. இதில் 21 ஆயிரத்து 316 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கும்பகோணம் மடத்து தெரு-காமாட்சி ஜோசியர் தெரு சந்திப்பில் அமைந்திருக்கும் இந்த முச்சந்தி சிறப்பு தடுப்பூசி முகாமில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இங்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியில் தொடர்ந்து இதுவரை 103வது நாளான நேற்று வரை 21 ஆயிரத்து 316 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று கோவாக்சின் 5 ஆயிரத்து 493 பேருக்கும், கோவிஷீல்டு 16 ஆயிரத்து 33 பேருக்கும், முதல் மற்றும் இரண்டாம் தவணையாக செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.