மேலூர் கோயில்களில் கார்த்திகை மாத சோமவார சங்காபிஷேகம்

மேலூர், டிச. 14: மேலூர் அருகே தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் உள்ள ஸ்ரீ சங்கரலிங்கம் கோயிலில் கார்த்திகை மாத 4ம் சோமவாரத்தையொட்டி நேற்று 108 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக சங்கரலிங்க சாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. விவசாயம் செழிக்கவும், மக்களின் ேநாயற்ற வாழ்வும் வேண்டி நடந்த இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் மேலூர் அருகேயுள்ள திருவாதவூர் திருமறைநாதர் சுவாமி வேதநாயகி அம்மன் கோயிலில் 4ம் சோமவார திங்களையொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: