சுசீந்திரம், டிச.14: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2ம் திருவிழாவன்று அதிகாலை 4 மணிக்கு விநாயகர் மூஷிகர் வாகனத்தில் திருவீதியுலா நடந்தது. இரவு 9.30 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி திருவீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. 3ம் திருவிழாவான நேற்று காலை 8 மணிக்கு சுவாமி புஷ்பக விமானத்தில் திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 5.30 மணிக்கு சுவாமி காசிமடம் மண்டக படிக்கு எழுந்தருளல், இரவு 10 மணிக்கு கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி, அம்பாளும் திருவீதியுலா நடந்தது. இரவு 10.30 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் திருவிழாவில் பங்கெடுக்க தனது தாய், தந்தையரை சந்திக்கும் ‘மக்கள் மார் சந்திப்பு நிகழ்ச்சி’ நடந்தது.