வேளச்சேரி: அடையாறில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால், குழந்தை இறந்து பிறந்ததாக உறவினர்கள் தனியார் மருத்துவமனை மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். சென்னை ஓட்டேரி, அலெக்சாண்டர் சாலையை சேர்ந்தவர் பிர்தவுஸ் பாத்திமா (25). நிறைமாத கர்ப்பிணியான இவர், கடந்த 3ம் தேதி, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று அதிகாலை பிரசவ வலியால் அவதிப்பட்ட பிர்தவுஸ் பாத்திமாவுக்கு குழந்தை பிறந்தது. ஆனால், அசைவின்றி கிடந்ததால் குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்தனர்.