ஒட்டன்சத்திரத்தில் வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு ‘கட்’

ஒட்டன்சத்திரம், டிச. 4: ஒட்டன்சத்திரம் நகராட்சியில் குடிநீர் இணைப்பு வரி பாக்கி செலுத்தாத வீடுகளில், இணைப்பை துண்டிக்க ஆணையாளர் தேவிகா உத்தரவிட்டார். அதன்படி நேற்று காந்திநகர், கருப்பணபுரம், பொன்னகரம், குறிஞ்சிநகர், திருவள்ளுவர் சாலை, தாராபுரம் சாலை குதிகளில் வரி பாக்கி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டிப்பு செய்தனர். மேலும் வரி செலுத்தாத பேருந்து நிலைய கடைகளை பூட்டி சீல் வைத்து எச்சரிக்கை செய்தனர். இப்பணியில் வருவாய் ஆய்வாளர் சேக்அப்துல்லா தலைமையிலான நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, கடை வாடகை ஆகியவை நீண்ட நாட்களாக செலுத்தாமல் இருக்கும் உரிமைதாரர்கள் உடனடியாக ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி நடவடிக்கையை தவிர்க்குமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: