புதுக்கோட்டை, டிச. 2: தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பினை ஈடு செய்வதற்காக “இல்லம் தேடிக் கல்வி” எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட இடைவெளியை போக்கவும், கற்றல் இழப்பை ஈடுசெய்யவும் தன்னார்வலர்களின் தொண்டு உணர்வினை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் “இல்லம் தேடிகல்வி” திட்டத்தில் சேவையாற்ற விருப்பமுள்ள தன்னார்வலர்கள், //illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்கள் பெயர் முகவரி மற்றும் கல்வித் தகுதி ஆகிய விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.