ராமநாதபுரம், ஏப்.14: ராமநாதபுரம் கூடுதல் கலெக்டர், நகராட்சி கமிஷனருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அதிகாரிகள், ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர். ராமநாதபுரம் கூடுதல் கலெக்டர், நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி மருத்துவர்களின் ஆலோசனை படி சிகிச்சை எடுத்து வருகின்றனர். மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஆய்வு கூட்டங்கள், தேர்தல் பணி, கொரோனா தடுப்பு பணி உள்ளிட்டவைகளின் போது உடன் பணியாற்றிய உயரதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை கலக்கம் அடைந்துள்ளனர். இதனால் அச்சமடைந்த பலர் தங்களை தனிமைபடுத்தி கொண்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளனர். உயரதிகாரிகள் இருவருக்கு நோய் தொற்று உறுதியானதால் பொதுமக்களிடம் தற்போது அச்சம் ஏற்பட்டு உள்ளது.