கொரோனாவுக்கு ஏட்டு பலி

சேலம், ஏப்.14: தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக, சேலம் மாவட்டத்துக்கு குஜராத் மாநில சிறப்பு காவல்படையைச் சேர்ந்த 85 பேர் கொண்ட ஒரு கம்பெனி வந்தது. இவர்கள், கெங்கவல்லி தொகுதிக்குட்பட்ட வீரகனூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு நாளான கடந்த 6ம் தேதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஏட்டு சூர்யாவான்சி என்பவருக்கு((50) மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று உறுதியானது. உடனே, அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர். மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுதொடர்பாக குஜராத் மாநில போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: