×

எலும்புக்கூடாக மீட்கப்பட்ட பெண் யார் என்பது குறித்து விசாரணை

சேலம், ஏப்.13:சேலம் கருப்பூரை அடுத்த மூங்கபாடி ஊராட்சி டால்மியாபுரம் பர்ன் அன்கோ பின்புறம் எலும்புக் கூடு ஒன்று  கிடந்தது. அந்த எலும்புக்கூடு அருகே வெள்ளை, நீல நிறத்தில் பிரவுன் நிற பூப்போட்ட சேலை, கருநீல நிற பாவாடை, பச்சை நிற ஜாக்கெட் கிடந்தது. இறந்தவரை அடையாளம் காண முடியவில்லை. இதையடுத்து எலும்புக் கூடாக கிடப்பது பெண் என்பது தெரியவந்துள்ளது. இறந்து 2 மாதத்திற்கு மேல் ஆகி இருக்கலாம் என்றும்  போலீசார் தெரிவித்தனர். எலும்புக் கூட்டை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து கருப்பூர் போலீசார் கூறுகையில், ‘‘எலும்புக்கூடாக கண்ெடடுக்கப்பட்ட பெண்ணின் வயது 30 முதல் 40 வரை இருக்கலாம். கருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு மாதமாக பெண்கள் யாரும் காணாமல் போனதாக புகார் வரவில்லை. அதனால் சேலம் மாவட்டம் மற்றும் தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் காணாமல் போன பெண்களின் பட்டியலை எடுத்து விசாரணை நடத்தி வருகிறோம்,’’  என்றனர்.

Tags :
× RELATED மது, கஞ்சா போதையில் வாலிபர்கள் ரகளை