தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 178 பேர் பாதிப்பு

தஞ்சை, ஏப்.12: தஞ்சை மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் ஏற்கெனவே நேற்று முன்தினம் வரை 21,981 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 19,790 பேர் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 910 பேர் என இருந்தது. இந்நிலையில், புதிதாக மேலும் 178 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது நேற்று தெரிய வந்தது. எனவே, மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,029 பேர் என உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 281 பேர் இறந்துள்ளனர். இதில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 25 பேர் இறந்துள்ளனர்.

Related Stories: