காரைக்கால், ஏப். 12: காரைக்காலில் மேலும் இருவர் உயிரிழந்ததை அடுத்து கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் நேற்று 71 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 10ம் தேதி அன்று 436 பேருக்கு பரிசோதனை செய்ததில் 71 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. காரைக்கால் 14 பேர், திருப்பட்டினத்தில் 12 பேர், நிரவியில் 9 பேர், கோவில்பத்தில் 8 பேர் ,திருநள்ளாறில் 7 பேர், வரிச்சிக்குடி , நெடுங்காடு பகுதியில் தலா 6 பேர் , கோட்டுச்சேரியில் 5 பேர், அம்பகரத்தூரில் 4 பேர் என 71 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.