ஓசூர், ஏப்.12: சம்பள உயர்வு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று 5வது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால், பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து, ஓசூருக்கு நாளொன்றுக்கு சுமார் 80 கர்நாடக மாநில அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் ஓசூர் வழியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு நாளொன்றுக்கு 100க்கும் மேற்பட்ட அம்மாநில அரசு பஸ்கள் இயக்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில், கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், சம்பள உயர்வு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 7ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.